சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கோயில் உண்டியலை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மன் கோயிலை, பூசாரி வழக்கம் போல் இன்று காலை திறந்தார்.
அப்போது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், போலீசாருக்கு தகவல் அளித்தார்.
கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















