செயற்கை நுண்ணறிவுத் துறையில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனம், அமெரிக்க ராணுவத்தின் நிபந்தனையற்ற பயன்பாட்டிற்குத் தனது கிளாட் ஏஐ தொழில்நுட்பத்தை வழங்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் பிப்ரவரி 27-ம் தேதிக்குள் எந்த நிபந்தனையுமின்றி ராணுவப் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும், இல்லையெனில் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும் ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி, மனசாட்சிக்கு விரோதமாக ராணுவத்தின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
















