முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததையடுத்து, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து பெரியகுளம் அதிமுக நகர செயலாளர் பழனியப்பன் தலைமையிலானோர், ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததற்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பழனியப்பன், அதிமுக தலைமைக்கு எதிராக பல்வேறு வழக்குகளை தொடுத்த ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததால், இபிஎஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்தார்.
















