சென்னையை அடுத்த பூந்தமல்லியில் நடைபெற்ற நகர மன்றக் கூட்டத்திற்கு, உறுப்பினர் ஒருவர் எரியாத மின்விளக்குகளுடன் வருகை தந்தார்.
பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது.
அப்போது, 5-வது வார்டு உறுப்பினர் வடிவேல், தனது வார்டில் பல நாட்களாக மின்விளக்குகள் எரியவில்லை என்றும், இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இதனை வலியுறுத்தி, எரியாத மின்விளக்குகளைக் கையில் ஏந்தியபடி கூட்டத்திற்கு வந்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
இதனிடையே, கூட்டத்தில் பங்கேற்காத ஆணையர் மற்றும் பொறியாளரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
















