திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
இன்று காலை விஐபி தரிசனம் மூலமாக சுவாமி தரிசனம் மேற்கொண்ட அவருக்கு, வேத மந்திரம் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக கோயிலுக்கு வந்த அவரை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
















