டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. 196 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, வரும் 5-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
















