தமிழகத்தில் எட்டு லட்சம் பேர் எழுதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி, 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில், தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 412 தேர்வு மையங்களில், 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் தேர்வை எழுதுகின்றனர்.
7 ஆயிரத்து 545 பள்ளிகளில் இருந்து, 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவர்கள், 27 ஆயிரத்து 783 தனித்தேர்வர்கள் மற்றும் 281 கைதிகள் இதில் அடங்குவர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 540 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
















