அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் யாத்திரையில் ஜேசிபி வாகனங்கள் மூலம் மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் ஜன ஆசிர்வாத யாத்திரை நடைபெற்று வருகிறது.
அதன்படி இரண்டாவது நாளாக மோரிகான் மாவட்டத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா வாகனத்தில் பேரணியாக சென்றார்.
அப்போது முதலமைச்சரை வரவேற்கும் வகையில் ஜாகிரோடு சாலையின் இருபுறமும் புல்டோசர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த புல்டோசர்களில் இருந்து முதலமைச்சர் மீது மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் குற்றவாளிகள் மீதான அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர்பெற்ற புல்டோசர் கலாசாரத்தை குறிக்கும் வகையில் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு இவ்வாறு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
















