ரிஷிகேஷில் நடைபெற்று வரும் ஆன்மிக விழாவில், இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளிநாட்டினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் பிப்ரவரி 13ம் தேதி முதல் கீர்த்தனை விழா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்ற இந்திய பக்தர்களைத் தடுத்து நிறுத்திய வெளிநாட்டு ஊழியர்கள், இடம் நிறைந்துவிட்டதாக கூறி அனுமதி மறுத்துள்ளனர்.
இதுகுறித்து ராகுல் என்பவர் வெளியிட்ட வீடியோவில், இந்தியாவில் நடைபெறும் ஒரு விழாவில் இந்தியர்களுக்கே அனுமதி இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டினர் வரும்போது மட்டும் இடம் இருப்பதாகக் கூறி அவர்களை உடனடியாகப் பதிவு செய்ய அனுமதிக்கிறீர்கள்;
ஆனால் இந்தியர்களிடம் இடம் இல்லை என்று பொய் சொல்கிறீர்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய மண்ணில் நடைபெறும் ஒரு கலாச்சார விழாவில் உள்நாட்டு மக்களுக்கே பாரபட்சம் காட்டப்படுவது கண்டிக்கத்தக்கது என நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















