2025-26 கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, தமிழகம் முழுவதும் தொடங்கியது.
12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் இத்தனை நாட்களாக பொதுத்தேர்வுக்காக தயாராகி வந்த நிலையில், இன்று மொழிப்பாடத்துடன் பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் மூன்றாயிரத்து 412 தேர்வு மையங்களில் நடைபெற்ற பொதுத்தேர்வில் எட்டு லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் தேர்வு எழுதினர்.
குறிப்பாக, ஏழு லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ, மாணவிகளும், 27 ஆயிரத்து 475 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதினர். பிள்ளதேர்வுகள், மார்ச் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.
















