திருநள்ளாறில் நடந்த சனிப்பெயர்ச்சி விழா சிறப்பு பூஜையில், ஈரான் போரில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி பாராயணம் செய்யப்பட்டது.
புதுச்சேரியின் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் மற்றும் ஜோதிடர் மாநாடு நடைபெற்று வருகிறது.
தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற பூர்வாங்க பூஜையில் வேத பாடசாலையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், வளைகுடா போரில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், போர் நிறுத்தம் ஏற்பட வேண்டியும் கோளறு திருப்பதிகம், நெடுங்கலம் பதிப்பகம் ஆகியவற்றை மாணவர்கள் 108 முறை பாராயணம் செய்தனர்.
















