சர்வதேச போர் காரணமாக எரிபொருள் கிடைக்காது என்ற அச்சத்தில் இலங்கை மக்கள் எரிபொருள் நிலையங்களில் குவிந்துள்ளனர்.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் உச்ச தலைவர் கமேனியும் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல், அமெரிக்கா, சவுதி, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், துபாய் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருவதால் மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் போர் காரணமாக மற்ற நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். அந்த வகையில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாக விநியோகிக்க தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தில் ஆழ்ந்து, எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும் இலங்கை அரசு அறிவுறுத்தியுள்ளது.
















