மகாராஷ்டிர மாநிலத்தில், சுமார் 2 ஆயிரம் பெண்கள் 20 விதமான நடனங்களை ஆடி உலக சாதனை படைத்தனர்.
சந்திப்பூரில் 2 ஆயிரத்து 432 பெண்கள் ஒன்றிணைந்து மாநில நடனமான ‘லாவணி’ நடனத்தை ஆடினர். 20 நிமிடங்களில் 20 விதமான ‘லாவணி’ நடனங்களை ஆடி அவர்கள் பார்வையாளர்களை அசத்தினர்.
இந்த நிகழ்ச்சி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மராட்டிய கலாச்சார அடையாளமான ‘லாவணி’ நடனத்தை உலக அரங்கில் முன்னிறுத்தவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
















