திருவாரூரில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு ஊசி போட்டதால் பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகையைச் சேர்ந்த பெயிண்டரான ரவிச்சந்திரன் என்பவருக்கு கால் நரம்பு சுருட்டல் காரணமாக காயம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக, மருத்துவரின் பரிந்துரையின்படி திருவாரூர் துர்க்காலயா சாலையில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுக்க மகளுடன் சென்றுள்ளார்.
அப்போது, அவருக்கு மருத்துவ ஊழியர் டெஸ்ட் ஊசி போட்டதால் ரவிச்சந்திரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக, ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நிலையில், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, ரவிச்சந்திரன் உறவினர்கள் ஸ்கேன் சென்டரை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















