திமுகவினரால் தமிழகம் தலை குனிவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் விமான பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக திருவள்ளூர் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஞானசேகரன், பெரியநாயகம், பிரவீன் உள்ளிட்டோர் வரிசையில் தற்போது பிரபாகரன் இணைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன் என கூறும் திமுகவினரின் நடவடிக்கை அதற்கு முரண்பாடாகவே உள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
















