போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமேனியின் இந்திய பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி அறிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஈரானின் கண்ணியத்தை மதிக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும்,பேச்சுவார்த்தை ஒரு தரப்புக்கு மற்றொரு தரப்பு உத்தரவிடுவதாக இருக்க கூடாது எனவும் கூறினார்.
ஈரான் யார் மீதும் முதலில் தாக்குதல் நடத்தவில்லை, தங்களை தற்காத்துக் கொள்வதாகவும், அமெரிக்கா தங்களுக்கு இணையாக மற்றொரு வல்லரசு நாடு உருவாவதை விரும்புவதில்லை எனவும் தெரிவித்தார்.
இந்தியாவோ அல்லது சீனாவோ ஒரு சக்திவாய்ந்த நாடாக உருவெடுப்பதை அமெரிக்கா விரும்பவில்லை எனவும் இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சியை தடுக்கவே, அமெரிக்கா உலகெங்கிலும் பல போர்களை உருவாக்கி வருவதாகவும் கூறினார்.
















