அதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக தம்பிதுரை அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இந்நிலையில், அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் தம்பிதுரை போட்டியிடுவார் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பிதுரை மத்திய இணையமைச்சராகவும், மக்களவை துணை சபாநாயகராவும் பதவி வகித்தவர் ஆவார். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
திமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களாக திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
















