இலங்கை அருகே ஈரானிய கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தியதில் ஈரான் கடற்படை வீரர்கள் 80-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மிலன் என்ற கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈரானை சேர்ந்த ஐஆர்ஐஎஸ் டினா ரக போர் கப்பலும் பங்கேற்றது. இந்த பயிற்சிக்குப் பின் ஈரான் போர் கப்பல் கடந்த சில நாட்களுக்கு முன் புறப்பட்டது. போர் கப்பலில் ஈரான் கடற்படை வீரர்கள் உள்பட சுமார் 180 பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், ஈரான் போர் கப்பல் இலங்கையிலிருந்து 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஈரான் போர் கப்பலை குறிவைத்து அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டவீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வீரர்களை இலங்கை கடற்படை மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.
















