தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், திருப்பூரில் அரசியல் கட்சிகளின் துண்டுகளை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அடுத்துள்ள வெள்ளிறவள்ளி, பள்ளகவுண்டம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நூற்றுக்கணக்கான விசைத்தறிக் கூடங்கள், அரசியல் கட்சித் துண்டுகள், கட்சிக் கொடிகள், கட்சி சின்னங்கள் பொறித்த வேட்டி, சேலைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், அதிமுக, பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளின், சுமார் ஒரு லட்சம் மீட்டர் துண்டுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவதற்குள் மூன்று லட்சம் மீட்டர் துண்டுகள் தயாரித்து விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும், சமீபகாலமாக அதிக அளவில் கட்சிப் பிரச்சார கூட்டங்கள் நடைபெற்று வருவதால் அதிக அளவில் துண்டுகள் விற்பனையாகி வருவதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
















