தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் சேலம் பள்ளக்காடு கிராமத்தில் மின் மாற்றி அமைத்து மின்சாரம் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த பள்ளக்காடு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் மின்சாரம் முறையாக வழங்கப்படாததால், மின்மாற்றி அமைக்க மக்கள், வீட்டிற்கு தலா 2 ஆயிரம் வசூலித்து மின்வாரிய அலுவலகத்தில் அளித்ததாக கூறப்படுகிறது.
பணத்தை பெற்றுக் கொண்டு மின்மாற்றி அமைக்காததால் ஆத்திரமடைந்த மக்கள், தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தமிழ் ஜனத்தில் செய்தி வெளியான நிலையில், மின் மாற்றி அமைத்து மின்சாரம் வழங்கப்பட்டது.
















