அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட கமேனி மற்றும் ஈரானின் முக்கிய தலைவர்களுக்கு தெஹ்ரானில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றம், தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்கள் மீதான தொடர் தாக்குதல்கள் ஆகியவற்றால் ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைக்கப்படுகிறது எனவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
















