இந்தியா வந்த பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்லாந்து அதிபா் அலெக்ஸாண்டா் ஸ்டப் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு புதன்கிழமை வந்தாா். இந்நிலையில் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது வா்த்தகம், முதலீடு, முக்கிய தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.
















