செய்யாறு அருகே மதுவுக்கு அடிமையான கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளாமலை கிராமத்தைச் சேர்ந்த ராஜா குடிபோதையில் தினமும் மனைவியையும், பிள்ளைகளையும் சித்ரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டிற்கு வந்த ராஜா மனைவி மற்றும் பிள்ளைகளை தாக்கியதாக தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மனைவி சாமுண்டீஸ்வரி சுத்தியலால் ராஜாவை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ராஜாவின் மனைவி சாமுண்டீஸ்வரி மற்றும் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
















