மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை உட்பட 6 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு அதிமுக சார்பில் தம்பிதுரை, கூட்டணிக் கட்சியான பா.ம.க சார்பில் அன்புமணி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோரும், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
பாமக நிறுவனர் ராமதாசின் உதவியாளர் சுவாமிநாதன் உட்பட 6 பேர் சுயேட்சையாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையைத் தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் தம்பிதுரை உட்பட 6 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைவரும் போட்டியின்றி தேர்வாக இருப்பது உறுதியாகியுள்ளது.
பாமக தலைவர் அன்புமணியின் வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாசின் உதவியாளர் உட்பட 6 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
















