நேபாள நாடாளுமன்ற தேர்தலில், ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால், தலைநகர் காத்மாண்டுவில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேபாள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மார்ச் 5ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 275 இடங்களில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலமும், மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.
இந்தநிலையில் பதிவான வாக்குகள் நேற்று முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், 95 இடங்களில் முன்னிலையில் உள்ளதாகவும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியை சேர்ந்த 35 வயதான பாலேந்திர ஷா பாலன் பிரதமராவது உறுதியாகி உள்ளது. இதனால் தலைநகர் காத்மாண்டுவில், ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஷர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 50 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
















