சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளதால் மேலும் போர் பதற்றம் நீடித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளம் அமைந்துள்ளது. நட்பு நாடுகளுடன் வான் வழி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த விமான தளத்தை சவுதி அரேபியா அரசு பயன்படுத்தி வருகிறது. தெற்கு ரியாத் பகுதியில் அமைந்துள்ள இந்த தளத்தின் மீது ஈரான் தனது ஏவுகணைகளை கொண்டு தாக்கியுள்ளது.
இதன் காரணமாக விமான தளத்தின் ஓடுதளம் மற்றும் உட்கட்டமைப்புகள் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அளவீடு செய்து வரும் சவுதி அரேபியா அரசு ஈரானின் பொதுசொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியா இதுவரை ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாத நிலையில் இந்த ஏவுகணை தாக்குதல் மேலும் போர் பதற்றத்தை நீட்டித்துள்ளது.
















