தேனி அருகே தேசிய தலைவர்களுள் ஒருவரான சுபாஷ் சந்திர போஸ் படத்தை அவமதிக்கும் வகையில், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சியில் திருமணம் மற்றும் கோவில் விழாவிற்காக பல பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புகைப்படம் புகைப்பிடிப்பது போலவும், ரத்தம் வழிவது போலவும், கத்தி ஏந்தி நிற்பது போலவும் ஏஐ தொழில்நுட்பத்தில் மாற்றி அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேசிய தலைவர்களை அவமதிக்கும் பேனர்களை அகற்றவும், இதுபோன்ற அச்சிடுதலைத் தடுக்கவும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















