ஈரானுடனான போரை முடித்துவிட்டு கியூபாவின் மீது கவனம் செலுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஈரானும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆரம்பத்தில் 5 வாரங்கள் வரை போர் தொடரலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் நாளுக்கு நாள் அமெரிக்காவிடம் இருக்கும் ஆயுதங்களின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் போர் எப்போது முடியும் என்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய டிரம்ப், ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை என தெரிவித்தார். ஈரானை வழிநடத்த பகுத்தறிவு மற்றும் விவேகமுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என கூறிய டிரம்ப், முதலில் ஈரானை முடித்துவிட்டு பின்னர் கியூபா மீது கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்தார். கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதார தடை காரணமாக அந்நாட்டிற்குள் எரிபொருள் கொண்டு செல்ல முடியாத நிலையுள்ளது குறிப்பிடத்தக்கது.
















