மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளபோதும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா – இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ளதால் மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
வளைகுடா நாடுகளில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால், உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களை சந்தித்து வருகிறது.
இந்த சூழலில், இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், விநியோக தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என மத்திய அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மற்றொருபுறம் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ரஷ்யாவில் இருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
















