மகளிர் ஆசியக் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய வீராங்கனை சன்ஃபிதா நோங்ரம், தனது அறிமுகப் போட்டியிலேயே கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், ஆசியக் கோப்பைத் தொடரில் கடந்த 23 ஆண்டுகளில் இந்திய மகளிர் அணி பதிவு செய்த முதல் கோல் என்ற சாதனையையும் படைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, வியட்நாம் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் வியட்நாம் அணி 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மேகாலயாவின் ஷில்லாங் நகரை சேர்ந்த சன்ஃபிதா நோங்ரம் என்ற இளம் வீராங்கனை இந்திய கால்பந்து அணிக்கு தேர்வாகினார். இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் வியட்நாம் அணிக்கு எதிராக களமிறங்கிய அவர், தனது அறிமுகப் போட்டியிலேயே கோல் அடித்து அசத்தினார்.
இந்திய மகளிர் அணி இந்த போட்டியில் தோற்றாலும், மகளிர் அணிக்கு உத்வேகமாக உருவெடுத்துள்ளார் சன்ஃபிதா நோங்ரம் என்று கூறினால் அது மிகையாகாது.
















