ஆண்டிபட்டி மலர் சந்தையில் பெரும்பாலான பூக்கள் விலை உயர்ந்து விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவு மற்றும் தொடர் முகூர்த்தநாள் என்பதால் பூக்கள் விலை உயர்ந்து ஏலம் போனது.
கிலோ 700 ரூபாய்க்கு ஏலம் போன மல்லிகை பூ 1,100 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு ஏலம்போன முல்லை, பிச்சி ஆகிய பூக்கள் 900 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு ஏலம் போன பன்னீர் ரோஜா 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுபோன்று பெரும்பாலான பூக்கள் விலை உயர்ந்து ஏலம் போனது.
















