ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் - இந்திய மயிலாசனம் இருந்த அரண்மனை சேதம்..சிறப்பு தொகுப்பு
Mar 15, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் – இந்திய மயிலாசனம் இருந்த அரண்மனை சேதம்..சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Mar 8, 2026, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் கடுமையான தாக்குதலில், அந்நாட்டின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் கோலெஸ்தான் அரண்மனை சேதமடைந்துள்ளது. ஈரானின் தேசிய மற்றும் கலாச்சார அடையாளத்தின் மீதான தாக்குதல் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஈரான் தலைநகர் டெஹ்ரானின் மையப் பகுதியில் கோலெஸ்தான் அரண்மனை அமைந்துள்ளது. இது முதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க சுவர் நகரமான சஃபாவிட் வம்சத்தின் போது கட்டப்பட்டது.

பின்னர், ஈரானின் ஐந்தாவது சஃபாவிட் ஷாவான அப்பாஸ் தி கிரேட், வடக்குப் பகுதியில் ஒரு பெரிய தோட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். பிறகு சாந்த் வம்சத்தைச் சேர்ந்த கரீம் கானால் இந்த அரண்மனை புதுப்பிக்கப்பட்டது.

1779ல் ஆட்சிக்கு வந்துபின் தெஹ்ரானை நாட்டின் தலைநகராக மாற்றிய கஜார் வம்சத்தின் அரசு அதிகார மையமாக இந்த அரண்மை விளங்கியது. பல நூற்றாண்டுகளாக இந்த பிரம்மாண்ட அரண்மனை கஜரி கட்டிடக்கலைக்கும் கலைநயத்துக்கும் ஒரு சிறந்த சான்றாக உள்ளது. சொல்லப்போனால் பாரசீக கலைகளில் ஐரோப்பிய பாணிகளை ஒருங்கிணைத்து இந்த அரண்மனை வடிவமைக்கப்பட்டுள்ளது. கோட்டையின் பெரும்பகுதி கஜர்களின் 131 ஆண்டுகால ஆட்சியின் போது கட்டப்பட்டுள்ளது.

பஹ்லவி ஆட்சி காலத்தில் கோலெஸ்தான் அரண்மனையில் மேலும் பல அரண்மனைகள் கட்டப்பட்டன. 1926-ல் ரேசா ஷா, 1967-ல் முகமது ரேசா ஷா மற்றும் ஷாபானு ஃபரா ஆகியோரின் முடிசூட்டு விழாக்கள் இந்த கோலெஸ்தான் அரண்மனையில் தான் நடந்தன. இதற்கிடையே பழைய அரண்மனை கட்டமைப்புகள் நவீன மற்றும் வணிக வளாகங்களாக மாற்றப்பட்டன.

சாந்த் வம்சத்தைச் சேர்ந்த கரீம் கானின் உட்புற இல்லத்தின் ஒரு பகுதியில் பளிங்குக் கல்லால் ஆன சிம்மாசனம் அமைந்துள்ளது. கஜர் ஆட்சிக் காலத்தில் கோடைக்கால அறையாகப் பயன்படுத்தப்பட்ட குள வீடு உள்ளது.

இந்த அரண்மனையில் உள்ள சலாம் மண்டபத்தில் மயிலாசனம் உள்ளது. இது 1739ம் ஆண்டு டெல்லியின் மீது படையெடுத்த நாதிர் ஷா, முகலாயர்களிடமிருந்து கோடிக்கணக்கான மதிப்பிலான வைரம், வைடூரியங்கள் ஆகியவற்றைக் கொள்ளையடித்தபோது இந்த புகழ்பெற்ற மயிலாசனத்தையும் கவர்ந்து சென்றார்.

அடுத்து ஃபத் அலி ஷாவால் கட்டப்பட்ட வைர மண்டபம் உள்ளது. இது கண்ணாடி வேலைப்பாடு மற்றும் வைரம் போன்ற வளைந்த கூரைகளுக்குப் புகழ் பெற்று விளங்கியது.

மேலும் 1883-ல் கட்டி முடிக்கப்பட்ட அபியாஸ் அரண்மனையில் ஒட்டோமான் பரிசுகள் எல்லாம் வைக்கப்பட்டிருந்தன.

தற்போது, எட்டு முக்கிய அரண்மனை கட்டமைப்புகளைக் கொண்டுள்ள​​ கோலெஸ்தான் அரண்மனையின் பெரும்பாலான பகுதிகள் கையெழுத்துப் பிரதிகளின் நூலகம், புகைப்படக் காப்பகம் மற்றும் ஆவணங்களின் காப்பகம் என அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டுள்ளன.

1974 ஆம் ஆண்டு ஈரானின் 5,000 ரியால் ரூபாய் நோட்டின் பின்புறத்தில் இடம்பெற்ற கோலெஸ்தான் அரண்மனை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகும்.

தற்போது நடைபெற்று வரும் போரில் அரண்மனையின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. அரிய வகை கலைப்பொருட்கள் சுக்குநூறாக உடைந்துள்ளன.

ஈரானின் பாரசீக பாரம்பரியத்துக்குள் செல்ல ஒரு புகழ்பெற்ற நுழைவாயிலாக இருந்த கோலெஸ்தான் அரண்மனை சுவர்கள் போரில் இடிந்து விழுவது என்பது வெறும் செங்கற்கள் விழுவதல்ல, ஒரு நாகரிகத்தின் சுவடுகள் மறைவதாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சாரப் பிரிவு கவலை தெரிவித்துள்ளது.

Tags: iranmilitaryMissilesGolestan PalaceGolestanamericausIsraeli attack.IranIsraelWar
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யா புதிதாக உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு!

Next Post

தமிழகத்தில் 6 ராஜ்யசபா உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies