பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.
ஈரான் போரால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் போதுமான அளவு இருப்பு உள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பில்லையென மத்திய அரசு தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலர்களைத் தாண்டாவிட்டால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 100 டாலராக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள எந்த பங்க்கிலும் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை பிரச்னை இல்லை என்று கூறியுள்ள மத்திய அரசு, ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே உள்ள வழித்தடங்களிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை துரிதப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், விமான எரிபொருள் போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும், எனவே உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் பீதியடையத் தேவையில்லை என்றும் அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்த நிலையில் உள்ளதாகவும் தெளிவுபடுத்தி உள்ளது.
















