நாஸ்ட்ராடாமஸ் தீர்க்க தரிசனம் - செப்டம்பர் வரை ஈரான் போர் நீடிக்கும் என கணிப்பு
Jul 29, 2026, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாஸ்ட்ராடாமஸ் தீர்க்க தரிசனம் – செப்டம்பர் வரை ஈரான் போர் நீடிக்கும் என கணிப்பு

Manikandan by Manikandan
Mar 9, 2026, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நான்கைந்து வாரங்கள் ஈரான் மீதான போர் நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் வரை போர் நீடிக்கும் என பிரான்ஸ் நாட்டுத் தீர்க்க தரிசி நாஸ்ட்ராடாமஸ் எழுதிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல், பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரானின் தாக்குதல் என மத்திய கிழக்கு போரில் சிக்கியுள்ள நிலையில் உலகமே அச்சத்தில் உள்ளது.

இந்தப்போர் ஐந்து வாரங்கள் வரை நீடிக்கும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில் 1555-ல் ( Les Propheties ‘லெஸ் ப்ராபெட்டீஸ்’ ) என்ற தனது நூலில் பிரான்ஸ் நாட்டு தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ், ஏழு மாதப் போர் பற்றி எச்சரித்துள்ளார்.

465 வருடங்களுக்கு முன் நாஸ்ட்ராடாமஸ் எழுதிய இந்த நூல் நூறு செய்யுள்கள் கொண்ட தொகுதிகளாக ‘நூற்றாண்டுகள்’ (centuries) என்று அழைக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் 26ம் ஆண்டாக இந்த ஆண்டு வருகிறது. எனவே 26-வது செய்யுளில் இந்த ஆண்டில் என்னென்ன நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

“ஒரு பெரிய மனிதன் பகலில் ஒரு இடியால் வீழ்த்தப்படுவான்.” என்று நாஸ்ட்ராடாமஸ் ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து தேனீக்களின் பெரும் கூட்டம் எழும், அவை எங்கிருந்து வந்தன என்று ஒருவரும் அறிய மாட்டார்கள்.” என்று திரள் ட்ரோன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏழு கப்பல்களைச் சுற்றி போர்க் கப்பல்கள் புறப்படும்; ஒரு மரணப்போர் வெடிக்கும். என்று கூறியுள்ளார். இது சீனா தைவான் போரை குறிக்கிறது என்று கூறப்படுகிறது.

இதுபோல பல கணிப்புகளைப் பதிவு செய்துள்ள நாஸ்ட்ராடாமஸ் முக்கியமாக ஏழு மாதம் பெரும் போர், தீமையால் மக்கள் இறந்தனர், மன்னர் தோல்வியடைய மாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

இது மத்திய கிழக்கில் நடக்கும் ஈரான் போர் வரும் செப்டம்பர் வரை நீடிக்கும் என்று ட்ரம்ப் கூறியதுடன் ஒத்து போவதாக கருதப் படுகிறது.

இதற்கிடையே நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஈரான் மீது தாக்குதல் நடத்த அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டது சட்ட விரோதமானது என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் இது தொடர்பாக கடந்த புதன் கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த போர் அதிகாரத் தீர்மான வாக்கெடுப்பில் குடியரசுக் கட்சியினர் 47-53 வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானத்தை தோற்கடித்தனர்.

வாக்கெடுப்புக்கு முன்னதாக மத்திய கிழக்கில் என்றென்றும் போர்களால் சோர்வடைந்த அமெரிக்க மக்களுடன் நிற்கிறீர்களா அல்லது ட்ரம்ப் மற்றும் பீட் ஹெக்செத் ஆகியோர் நாட்டை இன்னொரு போருக்குக் கொண்டு தள்ளும் போது அவர்களுடன் நிற்கிறீர்களா?” என்று ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷுமர் கேள்வியெழுப்பினார்.

ஈரான் போர் தொடரும் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவின் நிதியிலிருந்து 1 பில்லியன் டாலர் காணாமல் போகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Tags: NostradamusWARIranFrenchTrumpus president
ShareTweetSendShare
Previous Post

₹3.55 கோடி செலவில் அமைக்கப்பட்ட மின்தூக்கிக்கள் வேலை செய்யவில்லையா..? -அண்ணாமலை சரமாரி கேள்வி!

Next Post

பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை – மத்திய அரசு மீண்டும் உறுதி!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies