இந்தியாவில் பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருப்பதால் கச்சா எண்ணெய் விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வால், பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி உயர்வு ஏற்படுமா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த நிர்மலா சீதாராமன், கடந்த ஓராண்டாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த நிலையில், பிப்ரவரி 28-ந்தேதி தொடங்கிய மத்திய கிழக்கு போரால் விலை உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தியாவில் பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருப்பதால் கச்சா எண்ணெய் விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.
















