டி-20 உலகக்கோப்பையை தக்கவைத்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்த இந்திய அணிக்கு, பிசிசிஐ 131 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 96 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
வெறும் வெற்றியாக மட்டுமின்றி இந்த போட்டியில் பல சாதனைகளை பதிவு செய்த இந்திய அணி, டி-20 உலகக்கோப்பையை மூன்றாவது முறை கைப்பற்றும் முதல் அணியாகவும், தொடர்ந்து இரண்டு முறை வெற்றியை பதிவு செய்த முதல் அணியாகவும் உருவெடுத்தது.
இந்திய அணியின் இந்த வெற்றியை நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வெற்றியாகவே நினைத்து கொண்டாடினர். இந்நிலையில், நாட்டின் பெருமையை மேலும் உயர்த்திய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணிக்கு 131 கோடி ரூபாயை பரிசாக அறிவித்துள்ளது.
















