எங்களை போருக்கு இழுத்தது ஏன்? - ஈரானை திட்டித்தீர்த்த கத்தார் பிரதமர் அல்தானி..சிறப்பு தொகுப்பு
Apr 29, 2026, 08:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

எங்களை போருக்கு இழுத்தது ஏன்? – ஈரானை திட்டித்தீர்த்த கத்தார் பிரதமர் அல்தானி..சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Mar 10, 2026, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சம்பந்தமே இல்லாத போருக்கு இழுத்து விட்டதன் மூலம், ஈரான் தனது அண்டை வளைகுடா நாடுகளுக்கு தீங்கு விளைவித்துள்ளதாக கத்தார் குற்றம்சாட்டியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைகளைத் தொடங்கியபின்,பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது மட்டுமின்றி வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

எதிரியின் ஏவுகணை தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்து இடைமறிக்கும் வகையில் கத்தாரில் உள்ள அமெரிக்காவின் வான்பாதுகாப்பு ரேடாரையும், அல் உதெய்த்தில் உள்ள அமெரிக்காவின் மிகப் பெரிய விமானப் படை தளத்தையும் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்கி அழித்துள்ளது.

மேலும் குவைத்,சவூதி அரேபியா,ஓமன்,பஹ்ரைன் ஜோர்டன் உள்ளிட்ட மற்ற வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் கத்தார் தாக்குதலுக்குப் பின் முதல் முறையாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி உடன் தொலைபேசியில் பேசிய கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதலே தவிர கத்தாருக்கு எதிரானதல்ல என்று அரக்சி கூறியதை ஏற்றுக்கொள்ளாத அல் தானி, குவைத்தில் ஒரு சிறுமி உட்பட பல அப்பாவி பொதுமக்கள் ஈரானின் தாக்குதலில் பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஈரான், வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தங்களுக்கு நேரடியாக சம்பந்தம் இல்லாத போரில் ஈரான் தங்களை இழுத்து விட்டதால் வளைகுடா நாடுகளுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், அந்நாடுகளைக் காட்டி கொடுத்து விட்டதாகவும் கத்தார் பிரதமர் அல் தானி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வளைகுடா நாடுகள் மற்றும் மோதலில் நேரடியாக ஈடுபடாத பிற நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களை “ஆபத்தான தவறான கணக்கீடு” என்று விவரித்த அல் தானி, இதனால் வளைகுடா நாடுகளும் ஈரானுக்கு எதிராக போரில் இறங்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஏற்கெனவே கத்தார் பிரதமர் அல் தானி தலையீட்டின் பேரில் தான் கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாட்கள் இஸ்ரேல் ஈரான் போர் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

வளைகுடாவின் பாதுகாப்புக்காக அமெரிக்க இராணுவத் தளங்களைத் தங்கள் நாட்டில் அனுமதித்துள்ள போதிலும், ஈரானுடனும் நல்லுறவையே பேணி வருகின்றன.

வளைகுடா நாடுகள் முழுவதும் நடத்திவரும் தாக்குதல்கள், ஈரானுடனான அந்நாடுகளின் உறவுகளை சிக்கலாக்கி உள்ளன.

கத்தார் பிரதமர் உட்பட மற்ற வளைகுடா நாட்டு தலைவர்களும் ஈரானுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

ஈரானும் அமெரிக்காவும் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் வளைகுடா உலகின் மிகப்பெரிய போர்க்களமாகும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags: TrumpQatari Prime Minister Al ThaniAl ThaniamericaWARIranisrealQatar
ShareTweetSendShare
Previous Post

ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரும் – ட்ரம்ப் உறுதி!

Next Post

டி-20 உலகக்கோப்பையை தக்கவைத்த இந்திய அணிக்கு 131 கோடி பரிசு – பிசிசிஐ அறிவிப்பு!

Related News

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை : அமெரிக்கக் கடற்படை அதிரடி : சரிந்த பொருளாதாரத்தால் சரணடையும் ஈரான்? – சிறப்பு தொகுப்பு!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிக்கிறது – தேஜஸ்வி சூர்யா

ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies