கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழாவின் நிறைவு நாளில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் கடந்த 1ஆம் தேதி மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில், மாசி கொடை விழாவின் நிறைவு நாள் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாசி கொடை விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் திரளான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர்.
பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















