சென்னை பல்லாவரம் அருகே மாணவர்கள் தொட்டிலில் தொங்கியபடி 150க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்து சாதனை படைத்தனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் யோகா பள்ளியில் ‘ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக ஏரியல் யோகாவுடன் உயரே பறப்போம்’ என்ற தலைப்பில் நோவா உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 9 மாணாக்கர்கள் பங்கேற்று தொட்டிலில் தொங்கியபடி 150-க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்து அசத்தினர். இந்தச் சிறந்த முயற்சி, நோவா உலக சாதனை அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. சாதனை படைத்த மாணாக்கர்கள் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
















