புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் ஷூ-க்கு பதிலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
சர்வதேச, தேசிய மற்றும் தெண்மண்டல விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரொக்க பரிசு வழங்கும் விழா புதுச்சேரியில்
நடைபெற்றது. இதில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டு 135 கோடி ரொக்க பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் நேரம் என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை, ஷூ உள்ளிட்டவை வழங்குவதில் சிரமம் உள்ளதாக கூறினார். எனவே, அதற்கு மாற்றாக 80 ஆயிரம் மாணவர்களுக்கு உடனடியாக அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக, 2024-25ம் ஆண்டில் பதக்கம் வென்றவர்களுக்கு மட்டுமே பரிசு வழங்கப்படுவதாக கூறி மற்ற வீரர்கள், முதலமைச்சர் ரங்கசாமியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களை அழைத்து பேசிய முதலமைச்சர் , அனைவருக்கும் சேர்த்துதான் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்தார். விழா முடிந்ததும் தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறும் கூறினார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
















