திருமங்கலம் அருகே என்டிஏ vs தமிழ்நாடு என்று பிரிவினையை தூண்டும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தடுப்புச்சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் மேல் பகுதியில் இந்தியில் “NDA” என்று எழுதப்பட்டுள்ளது.
கீழ் பகுதியில் தமிழில் “தமிழ்நாடு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இரண்டிற்கும் நடுவே “VS” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு என்ற சொல்லுக்குப் பின்னால் தமிழக வரைபடமும், அதன் உள்ளே உதயசூரியன் சின்னமும் அச்சிடப்பட்டுள்ளன.
தேசிய அளவில் இயங்கும் ஒரு கூட்டணிக்கும், ஒரு மாநிலத்திற்கும் இடையில் மோதல் இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்குவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், இது பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
















