வெனிசுலாவில் குதிரையில் வேகமாக சென்று காளையை கீழே விழுச் செய்யும் கோலியோ எனும் வினோத போட்டி நடைபெற்றது.
வெனிசுலாவின் பசுமை நிறைந்த புல்வெளிப் பிரதேசமான சான் பெர்னாண்டோ டி அபுரேவில் பாரம்பரிய “கோலியோ” போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
வீரர்கள் மின்னல் வேகத்தில் குதிரையில் சென்று, ஓடிக்கொண்டிருக்கும் காளையின் வாலைப் பிடித்து இழுத்து அதைக் கீழே விழச் செய்ய வேண்டும். காளை கீழே விழும் முறையைப் பொறுத்து புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
இந்த போட்டியில் சுமார் 200 குதிரைப்படை வீரர்கள் கலந்து கொண்டனர். வெனிசுலாவின் ‘கவ்பாய்’ கலாச்சாரத்தின் அடையாளமாக இந்தப் போட்டி கருதப்படுகிறது.
அங்குள்ள மக்களுக்கு இது ஒரு வீர விளையாட்டாகவும், திருவிழாவாகவும் பார்க்கப்படுகிறது. இந்த விளையாட்டு அங்குள்ள மக்களிடையே மிகவும் பிரபலம் என்றாலும், இதற்குப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த போட்டியை தடை செய்யக் கோரிக்கை விடுத்தாலும், இது தங்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என உள்ளூர் மக்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
















