மேற்குவங்கத்தின் 22வது ஆளுநராக, ஆர்.என்.ரவி பதவியேற்று கொண்டார்.
மேற்குவங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ் பதவி விலகிய நிலையில், அந்த மாநிலத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டார்.
சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட ஆர்.என்.ரவி, அங்கிருந்து மேற்குவங்கத்துக்கு சென்றார். கொத்தாவில் உள்ள மக்கள் மாளிகைக்கு சென்ற ஆர்.என்.ரவிக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மக்கள் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மேற்குவங்க ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்று கொண்டார்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சட்டமன்ற சபாநாயகர் பிமன் பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
















