தமிழகத்தில் பெட்ரோல், டீசல் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்து எரிபொருள் நிலையங்களும் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அச்சத்தில் அதிகமாக பெட்ரோல் வாங்குதல் அல்லது தேவையற்ற முறையில் எரிபொருளை சேமித்து வைப்பதை மக்கள் தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கேன்கள், பாட்டில்கள், பாத்திரங்களில் பெட்ரோலை சேமித்து வைப்பது போன்ற பாதுகாப்பற்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து எரிபொருள் விநியோகம் வழக்கம்போல நடைபெற்று வருவாதகவும், தொடர்ந்து தடையில்லா விநியோகத்தை உறுதி செய்ய உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















