பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி - பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்!
Jun 13, 2026, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி – பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 13, 2026, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதியது.

போளூரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்குகளில் குவிந்தனர். மேலும் சிலர் பாட்டில்கள் மற்றும் கேன்களிலும் பெட்ரோலை நிரப்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பெட்ரோல் பங்கில், டீசல் காருக்கு பெட்ரோல் நிரப்பியதால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக நள்ளிரவுமுதல் கேன்களில் பெட்ரோல், டீசல் வாங்கிச் சென்று இருப்பு வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பணிச்சுமையால் குழப்பமடைந்த பணியாளர் ஒருவர், கார் ஒன்றுக்கு டீசல் நிரப்புவதற்கு பதிலாக பெட்ரோலை நிரப்பியதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த காரில் இருந்து பெட்ரோலை எடுக்க சுமார் இரண்டு மணி நேரம் ஆனது. இதனால் அந்த பங்கில் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய கொடைக்கானலிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து எரிபொருள் நிரப்பிச் சென்றனர்.

காரைக்கால் மாவட்ட எல்லையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் தமிழக வாகன ஓட்டிகள் குவிந்தனர்.திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள், காரைக்கால் அடுத்த மாவட்ட எல்லையான அம்பகரத்தூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் குவிந்தனர். பெட்ரோல் மற்றும் டீசல்களை வாகனங்களில் நிரப்ப இருசக்கர வாகனங்களில் அதிக அளவிலான வாகன ஓட்டிகள் வந்னர்.
மேலும் கேன்களில் பெட்ரோல், டீசல் வாங்க வந்த சிலரை போலீசார் கடுமையாக எச்சரித்து விரட்டியடித்தனர். பெட்ரோல் பங்கில் தட்டுப்பாடு இல்லை என்றும் அறிவுறுத்தினர்.

Tags: crowd in petrol pumbsiran attack israelisrael iran attackiran attackiran attacksiran attack uaeiran attackediran attack dubaiiran uae attackiran attack on dubai
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது – இந்திய ஆயில் நிறுவனம்

Next Post

மதுரையில் கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை – குண்டர் சட்டத்தில் இருவர் கைது!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies