இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் 23 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் பக்தர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார்.
அப்போது, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் 23 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், அன்னதானக் கூடம், விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவிப் பொறியாளர், உதவி ஸ்தபதி மற்றும் செயல் அலுவலர் ஆகிய பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 80 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
















