விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் முழு அளவிலான ஏற்றுமதி – இறக்குமதி வணிகச் செயல்பாடுகளை முதலமைச்சர் சதீசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் இன்று முதல் முழு அளவிலான நேரடி ஏற்றுமதி – இறக்குமதி எனப்படும் EXIM வர்த்தகச் செயல்பாடுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. விழிஞ்ஞம் துறைமுகத்தில் நடந்த விழாவில் முதல் ஏற்றுமதி கண்டெய்னரை முதலமைச்சர் சதீசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், துறைமுக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கேரள அரசு சார்பில் 400 கோடி ரூபாய் மதிப்பில் ‘மிஷன் சமுத்ரா’ (Mission Samudra) என்ற புதிய கடல்சார் திட்டத்தையும் அதன் அதிகாரப்பூர்வ இலச்சினையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் சதீசன், இந்தியாவில் மிகப்பெரிய துறைமுகமான விழிஞ்ஞம் துறைமுகம் AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது என தெரிவித்தார். மேலும், துறைமுகம் சம்மந்தமான சாலைகளை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
















