பாமகவின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணியும், தன்னையும் வழக்கில் சேர்க்கக் கோரி பாமகவின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனனும் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், வடிவேல் ராவணனை வழக்கில் சேர்க்க மறுத்தது. இதனை எதிர்த்து வடிவேல் ராவணன், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை விதித்தும், வடிவேல் ராவணன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
















