மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை மாநாகராட்சியில் 200 கோடி ரூபாய் அளவிற்கு வரி முறைகேட்டில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரை முனிச்சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா மற்றும் பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மதுரை மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் திமுகவினர் ஊழல் செய்துள்ளதாக பாஜக மாநில செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் குற்றம் சாட்டினார். பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தலுக்கு பின் திமுகவினர் சிறைக்குச் செல்வார்கள் என்று தெரிவித்தார்.
















