அமெரிக்காவில் பல மில்லியன் டாலர்கள் மோசடி செய்ததாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 சகோதரர்களுக்கு 420 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பென்சில்வேனியாவில் வசித்து வந்த பாஸ்கர் சவானி, அருண் சவானி என்ற சகோதரர்கள் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களை தொடங்கினர். அவற்றில் பெரும்பாலானவை மருத்துவம், சுகாதாரம், நிதி சார்ந்தவையாக இருந்தன.
அமெரிக்க அரசு, ஏழை மக்களுக்காக வழங்கும் ‘மெடிகேட்’ என்னும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இவர்கள் இருவரும் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, தகுதியற்ற மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்துவிட்டு, தகுதியுள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகப் பொய் கணக்கு காட்டி 270 கோடி மோசடி செய்தாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், போலி ஆவணங்கள் மூலம் H-1B விசா பெற்றது, தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டியது, வரி ஏய்ப்பு செய்தது, சட்டவிரோத வருமானத்தை மறைக்க போலி நிறுவனங்களை தொடங்கியது என அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
இவற்றை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் மீதான 42 குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது. இதனையடுத்து, இருவருக்கும் 420 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
















